திமுக எம்எல்ஏ., கார் விபத்து; 2 பேர் படுகாயம்... காவல் நிலையத்தில் புகார்!
ரிஷிவந்தியம் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக பதவி வகித்து வருபவர் திமுகவைச் சேர்ந்த வசந்தம் கார்த்திகேயன். இவர் காரைக்கால் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக தனது இன்னோவா கிரிஸ்டா காரில் சென்றுள்ளார். நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வழியாக காரில் சென்றுக் கொண்டிருந்த போது, என்.என்.சாவடி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் அவ்வழியாக எருக்கடாஞ்சேரியை சேர்ந்த மணிகண்டன் (18), 12ம் வகுப்பு மாணவர் செல்வகுமார் (16) ஆகியோர் தங்களது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த பை, காளியப்பநல்லூர் ஊராட்சி மன்ற அலுவலகம் உள்ள சாலையில் திரும்பி இருக்கிறது. பின்னால் பயங்கர வேகத்தில் வந்துக் கொண்டிருந்த ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ-வின் கார் ஓட்டுநர், இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக காரை சாலையின் ஓரமாக அவசரமாக திருப்பி உள்ளார். இருப்பினும் இருசக்கர வாகனம் கார் மீது மோதி விபத்திற்குள்ளானது.
அதிவேகத்தில் சென்றுக் கொண்டிருந்த காரை திடீரென திருப்பியதால், கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த கார்த்தி என்பவரது வீட்டின் முன் பகுதியில் புகுந்தது. இதில் வீட்டின் முன் நிறுத்தி இருந்த இருசக்கர வாகனம், கார் ஆகியவை சேதமடைந்தது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்ற மணிகண்டன் மற்றும் செல்வகுமார் ஆகிய இருவருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இந்நிலையில் அவ்வழியாக வந்த மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, காயமடைந்த இருவரையும் மீட்டு, தான் வந்த அரசு வாகனத்தில் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இந்த விபத்தில் நல்வாய்ப்பாக திமுக எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன் காயங்கள் ஏதுமின்றி உயிர் தப்பினார்.
இந்த விபத்து தொடர்பாக வீட்டின் உரிமையாளர் கார்த்தி, பொறையார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இருசக்கர வாகனத்தை அஜாக்கிரதையாக ஓட்டி சென்று விபத்தை ஏற்படுத்தியதாக மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா