பெரும் சோகம்... நாயை விரட்ட முயன்ற இளைஞர் மின்சாரம் தாக்கி பலி... பகீர் சிசிடிவி காட்சிகள்!
மத்தியப் பிரதேசம் மாநிலம் கஜுராஹோவில் உள்ள ஒரு விடுதி வளாகத்தில், நாயை விரட்ட முயன்ற இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. சத்தர்பூர் மாவட்டம் ரயில் நிலையம் அருகிலுள்ள ஒரு விடுதிக்குள் நாய் ஒன்று நுழைந்ததால், அதை வெளியேற்ற அந்த இளைஞர் நீளமான இரும்புக் கம்பி ஒன்றை எடுத்துச் சென்றுள்ளார். இதுவே அவருக்கு விதியின் விளையாட்டாக மாறியுள்ளது.
சத்தம் கேட்டு ஓடிவந்த விடுதி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள், இளைஞர் சடலமாகத் தேங்கியிருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விடுதியை ஒட்டிச் செல்லும் மின்கம்பிகள் விதிகளுக்கு மாறாகத் தாழ்வாகச் சென்றதா அல்லது கவனக்குறைவால் இந்த விபத்து நடந்ததா என்ற கோணத்தில் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!