அதிர்ச்சி... என்ஜினியரிங் மாணவர்  கல்லூரி வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை!!

 

சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் அருகே கோணங்கியூர் பகுதியில் வசித்து வருபவர்  சந்திரன் . இவருடைய மகன் குணால். இவர், திருச்செங்கோடு பகுதியில்   தனியார் இன்ஜினீயரிங் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார்.இவர்  தனது பாட்டி வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டைவிட்டு  வெளியே சென்றவர் இரவு வரை வீடு திரும்பவில்லை. இதனையடுத்து பெற்றோர்களும், உறவினர்களும் பல  இடங்களில் தேடி அலைந்தனர். 


இந்நிலையில் நேற்று அதிகாலை  எட்டிகுட்டைமேடு அரசு பி.எட் கல்லூரி வளாகத்தில்   குணால் தூக்கில் சடலமாக தொங்கினார். இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும்  சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் குணால் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


மேலும் இச்சம்பவம் குறித்து  வழக்குப்பதிவு செய்யப்பட்டு   தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  கல்லூரி வளாகத்தில் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும்,  சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை