41 ஆண்டுகளுக்கு பிறகு குதிரையேற்றத்தில் தங்கம்.. இந்தியா அசத்தல் சாதனை!!
சீனாவில் ஹாங்சோ நகரில் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் இருந்து பல்வேறு பிரிவுகளில் வீரர், வீராங்கனைகள் சீனாவிற்கு விளையாடி வெற்றிகளை குவித்து வருகின்றனர். ஈக்வஸ்டேரியன் என்ற குதிரையேற்ற விளையாட்டின் டிரஸ்ஸாஜ் அணி பிரிவில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்று அசத்தல் சாதனை படைத்துள்ளது.
அதன் பிறகு 41 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றுள்ளது . பல்வேறு தரப்பிலிருந்தும் இந்திய அணிக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன. இது குறித்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் இது வரலாற்று சிறப்புமிக்க வெற்றி என பதிவிட்டுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...