undefined

 ஹோட்டல் அதிபர் மன்னிப்பு கேட்டாலும் கேள்வியில் இருந்த உண்மை மாறாது... சீமான் ஆவேசம்!

 
 

"ஹோட்டல் அதிபர் மன்னிப்பு கேட்டாலும் அவர் கேட்ட அந்த கேள்வியில் இருக்கும் உண்மையை யாராலும் மறுக்க முடியாது" என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறி உள்ளார்.கோவையில் நடைபெற்ற ஒரு கலந்துரையாடல் நிகழ்வின் தாக்கம் டெல்லி வரையும், எதிர்க்கட்சிகள் அறிக்கை விடும் அளவுக்கும் கொண்டு சென்றிருக்கிறது. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அன்னப்பூர்ணா ஹோட்டல் உரிமையாளர் மன்னிப்பு கேட்க, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டு கண்டன அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கின்றன.

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். வெளிநாட்டில் உள்ள அண்ணாமலை மன்னிப்பு கோரி விட்டாலும் இன்னமும் விவகாரம் ஓயவில்லை. திமுக., காங்கிரஸ், அதிமுக., என அனைத்துக் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளும் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடையே பேசுகையில், "மதுவுக்கு எதிராக நீண்ட காலம் போராடி வரும் பாமக., நிறுவனர் ராமதாசை விடுதலை சிறுத்தைகள் நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டுக்கு அழைக்க வேண்டும். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஹோட்டல் உரிமையாளர் மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனாலும் பேசின உண்மை மாறாது. அவரின் கேள்வி நாடு முழுவதும் பரவி விட்டது. ஆனால் அதிகாரம் அதை பணிய வைக்கிறது. அவர் எவ்வளவு தான் வருத்தம் தெரிவித்தாலும் அந்த கேள்வியில் இருக்கும் உண்மையை யாராலும் மறுக்க முடியாது” என்று கூறினார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை