கொடூரம்... மகளை கத்தியால் குத்திய தந்தை... !!

 

திருப்பத்தூர் மாவட்டம்  கொடையாஞ்சி கிராமத்தில் வசித்து வருபவர்  வீராச்சாமி .  இவருக்கு 2 மனைவிகள். 2வது மனைவி மீனா. இவரது மகள் சித்ராவுக்கு வயது 31. சித்ராவுக்கும், அவரது கணவர் தனசேகரனுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சித்ரா கணவரை பிரிந்து தனது தந்தையுடன் வசித்து வருகிறார். அதே நேரத்தில்  சித்ராவிற்கு வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது.  

இதனால் வீட்டில் அடிக்கடி தந்தையுடன் சித்ரா தகராறில்   ஈடுபட்டு வந்தார்.  தந்தை ஏற்கனவே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு வீட்டில் இருக்கும் நிலையில் சித்ராவிடம் இதுகுறித்து பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளார். அந்த வகையில் சம்பவத்தன்றும் சித்ராவுக்கும், அவரது தந்தைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.  மது போதையில் இருந்த தந்தை வீராசாமி மகள் சித்ராவை கத்தியால் குத்தியுள்ளார்.  ரத்த வெள்ளத்தில் இருந்த அவரை அவரது தாயார் மீனா மற்றும் அப்பகுதி மக்கள் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில்  சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். 


 அவருக்கு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து  காவல்துறை  வழக்கு பதிவு செய்து வீராசாமியை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  வாணியம்பாடி அருகே மகளின் தகாத உறவை கண்டித்த தந்தை ஆத்திரத்தில் தன் மகளையே கத்தியால் குத்தியதால் அப்பகுதியில் பெரும்  பரபரப்பும், அதிர்ச்சியும்  ஏற்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!