டாக்கா விமான நிலையத்தில் பெரும் தீ விபத்து... விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்!
வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தில் இன்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
விமான நிலையத்தில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை சேமித்து வைக்கும் கிடங்கு பகுதியில் திடீரென தீ பரவியது. சில நிமிடங்களுக்குள் தீயின் அளவு பெருகி, அடர்ந்த புகை முழு வளாகத்தையும் மூடியது. இதனால் பயணிகள் மற்றும் பணியாளர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!