முன்னாள் பிரதமர் தேவகவுடா மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!
முன்னாள் பிரதமர் எச்.டி.தேவகவுடா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வரப்படுவதாகவும், மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அவருக்கு வயது 92.
முன்னாள் பிரதமரும் மஜத தலைவருமான எச்.டி.தேவகவுடா, வயோதிகத்தால் அவ்வப்போது உடல்நலக்குறைவு பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறார். இந்நிலையில் திடீர் காய்ச்சல் காரணமாக பெங்களூருவில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக முன்னாள் பிரதமர் தேவகவுடா அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்களின் சிகிச்சைக்கு பின் தேவகவுடாவின் உடல்நிலை தேறிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!