சந்திராயன் 3க்கு  போட்டியாக எச் 2ஏ !! இந்தியாவை பின் தொடரும் ஜப்பான்!! 

 

இந்தியாவின் இஸ்ரோ ஜூலை 14ம் தேதி சந்திராயன் 3 விண்கலத்தை நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக அனுப்பியுள்ளது.  அதன் லேண்டர் ஆகஸ்ட் 23ம் தேதி  மாலை 6.04 மணியளவில் நிலவில் தரையிறங்கியது. பின்னர், அதில் இருந்து ரோவர் வெளியே வந்து ஆய்வு பணிகளை செய்து வருகிறது.  இதேபோல் ஜப்பானின் விண்வெளி ஆய்வு மையம் சார்பில் நிலவை ஆய்வு செய்வதற்கான பயண திட்டம் உருவாக்கப்பட்டது.


இதையடுத்து நிலவுக்கு வெற்றிகரமாக விண்கலம் அனுப்பிய ஜப்பான் விஞ்ஞானிகளுக்கு இஸ்ரோ வாழ்த்து தெரிவித்துள்ளது. “நிலவுக்கு SLIM லேண்டர் வெற்றிகரமாக ஏவப்பட்டது. உலகளாவிய விண்வெளி சமூகத்தின் மற்றொரு வெற்றிகரமான சந்திர முயற்சிக்கு வாழ்த்துக்கள்” என இஸ்ரோ எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது. ஜப்பானின் இத்திட்டம் வெற்றி பெற்றால் நிலவை ஆய்வு செய்வதற்கான திட்டத்தில் இந்தியாவிற்கு அடுத்தபடியாக வெற்றி பெற்ற உலகின் 5வது நாடாக ஜப்பான் திகழும் .

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை