undefined

இரவு  10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! 

 
 

தமிழகத்தில் இன்று சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், மாநிலத்தின் 3 மாவட்டங்களில் இன்று இரவு  மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மீண்டும் வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, சென்னை, கடலூர், காஞ்சிபுரம், நாமக்கல், திருவள்ளூர், தூத்துக்குடி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, வடகிழக்கு பருவமழை செயல்பாடு தொடர்ந்துள்ளதால், மழை வாய்ப்பு இன்னும் சில நாட்கள் நிலைத்திருக்கும் எனவும், பொதுமக்கள் வானிலை முன்னறிவிப்புகளை கவனித்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!