undefined

 தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

 
 

தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இதேபோன்று மழை ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, கடலோர மாவட்டங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நிலையில், சில இடங்களில் திடீர் மழை பெய்யும் சாத்தியமும் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!