மத அடையாளங்களுக்குத் தடையில்லை... லென்ஸ்கார்ட் நிறுவனம் குறித்த சர்ச்சைக்கு நிறுவனர் விளக்கம்!
லென்ஸ்கார்ட் நிறுவனத்தின் ஊழியர் சீருடைக் கொள்கை குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல் ஒன்று வேகமாகப் பரவி வந்தது. ஊழியர்கள் பொட்டு அல்லது திலகம் அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியான அந்த ஆவணத்தால் பெரும் சர்ச்சை வெடித்தது. இதனைத் தொடர்ந்து நிறுவனத்தின் நிறுவனர் பியூஷ் பன்சால் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் இது தொடர்பாக விரிவான விளக்கத்தை அளித்துள்ளார்.
தங்கள் நிறுவனம் இந்தியர்களால் இந்தியர்களுக்காக உருவாக்கப்பட்டது என்றும் ஊழியர்களின் கலாச்சார நம்பிக்கைகளைத் தாங்கள் மதிப்பதாகவும் பன்சால் கூறியுள்ளார். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பணிபுரியும் தங்களது குழு உறுப்பினர்கள் ஒவ்வொரு நாளும் தங்கள் பாரம்பரியத்தைப் பெருமையுடன் வெளிப்படுத்துகிறார்கள் என்று அவர் புகழாரம் சூட்டினார். இந்த விளக்கத்தின் மூலம் சமூக ஊடகங்களில் லென்ஸ்கார்ட் நிறுவனம் குறித்து நிலவி வந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!