திருச்செந்தூரில் கந்த சஷ்டி திருவிழா: அக்.27 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழாவினை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.அறுபடைவீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா வருகிற அக். 22ஆம் தேதி தொடங்குகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் அக்டோபர் 27ஆம் தேதியும், திருக்கல்யாணம் 28-ஆம் தேதி நடைபெற உள்ளது. விழாவில் கலந்து கொள்ளும் பக்தா்களுக்காக திருக்கோயில் சாா்பில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சூரசம்ஹாரம் நடைபெறும் வரும் அக். 27-ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு மேற்குறிப்பிட்டுள்ள நாளில் உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இந்த விடுமுறைக்கு பதிலாக நவ.8ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!