விசாகப்பட்டினம் ஸ்டேடியத்தில் கேலரிகளுக்கு மிதாலி ராஜ், ரவி கல்பனா பெயர்கள்... மாநில அரசு அறிவிப்பு!
விசாகப்பட்டினத்தில் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியத்தின் கேலரிக்கு இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள் மிதாலிராஜ் மற்றும் ரவி கல்பனா பெயரை சூட்ட வேண்டும் என ஸ்மிர்தி மந்தனா கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய பெண்கள் கிரிக்கெட்டுக்கு பெரும் பங்காற்றிய ஆந்திராவைச் சேர்ந்த மிதாலிராஜ் மற்றும் ரவி கல்பனா ஆகியோரது பெயரை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் உள்ள கேலரிக்கு சூட்ட வேண்டும் என தற்போதைய இந்திய பெண்கள் அணியின் துணை கேப்டன் ஸ்மிர்தி மந்தனா, ஆந்திர தகவல் நுட்பத்துறை மந்திரி நாரா லோகேசுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கையை ஆந்திர அரசும் ஏற்றுக் கொண்டுள்ளது.
மிதாலி, ரவி கல்பனாவை கெளரவிக்கும் வகையில் அவர்களது பெயர் விசாகப்பட்டினம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் உள்ள கேலரிக்கு சூட்டப்பட இருப்பதாக ஆந்திர கிரிக்கெட் சங்கம் தெரிவித்தது.
பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்த மைனாதனத்தில் வரும் 12ம் தேதி மோதுகிறது. இந்த ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக மிதாலி, கல்பனா பெயரிலான கேலரி திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!