தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு!
தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் முன்பு தெரிவித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக, இன்று மாநிலத்தின் சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக புதிய எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் ராணிப்பேட்டை ஆகிய ஏழு மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை நிபுணர்கள், வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு காரணமாக வட தமிழகப் பகுதிகளில் வானிலை மாறுபாடுகள் தொடரும் எனவும், கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!