undefined

 மோடி ட்ரம்ப்  விரைவில் நேரில் சந்திப்பு... அமெரிக்க அதிகாரி தகவல்!

 


இந்திய பிரதமர் மோடி அமெரிக்க அதிபர்   டிரம்ப் விரைவில்  நேரில் சந்திப்பு  நடைபெறும் என  அமெரிக்க உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி  தெரிவித்துள்ளார். இந்திய பொருள்களுக்கு 50 சதவிகிதம் வரி விதித்து டிரம்ப் உத்தரவிட்டதை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.


அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ரஷியாவின் கச்சா எண்ணெய்யை இந்தியா கொள்முதல் செய்வதை டிரம்ப் மற்றும் அந்நாட்டு அமைச்சர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.  இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்னதாக இந்தியாவுடனான நட்புறவு தொடரும் எனக் கூறிய ட்ரம்ப், பிரதமர் மோடியின் பிறந்த நாளில்  தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், டிரம்ப் மற்றும் மோடி விரைவில் நேரில் சந்திக்க இருப்பதாக  அமெரிக்க உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி  தெரிவித்துள்ளார். "மோடி மற்றும் டிரம்ப் இருவரும் நேரில் சந்திப்பதை நீங்கள் விரைவில் பார்ப்பீர்கள் என நம்புகிறேன்.  இந்தோ - பசிபிக் கூட்டமைப்பின் க்வாட் உச்சி மாநாட்டுக்கான திட்டங்கள் நடந்து வருகின்றன. இந்தாண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறலாம்.

டிரம்ப் நிர்வாகத்தில் இந்தியாவுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. தொடர்ந்து உயர்நிலை அளவிலான பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுகின்றன. இந்தியாவுடனான உறவை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக வாஷிங்டன் கருதுகிறது.  அமெரிக்க வெளியுறவு அமைச்சராக மார்கோ ரூபியோ பதவியேற்றதும்  செய்த முதல் பணி, க்வாட் கூட்டமைப்பு நாடுகளான இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பானுடன் ஆலோசனை நடத்தினார். இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் இருதரப்பு பேச்சுவார்த்தையும் நடத்தினார். அதிபராக  பதவியேற்ற  2 வாரங்களுக்குள் வெளிநாட்டில் இருந்து வந்த முதல் தலைவர் பிரதமர்  மோடிதான்" எனத் தெரிவித்தார்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?