17 ஆண்டுக்கு பிறகு ரஜினி கமல் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்... ரசிகர்கள் உற்சாகம்... !!

 

கமல்ஹாசன் , ரஜினிகாந்த் இருவருமே நண்பர்கல் என்றாலும் இருவேறு கதைக் களங்களில் நடித்து  வருகின்றனர். ரஜினி, கமல் ரசிகர்கள் மோதல் ஒரு காலத்தில் பெரும் சர்ச்சைகளை உருவாக்கியுள்ளன. தற்போது பழைய திரைப்படங்களை ரீரிலீஸ் செய்வது தான் லேட்டஸ்ட் ட்ரெண்டிங்க். அந்த வகையில் ரஜினியின் முத்து திரைப்படமும், கமலின் ஆளவந்தானும் மீண்டும் ரீரிலீஸ் செய்யப்பட உள்ளன. இரண்டும் ஒரேநாளில் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆளவந்தான் திரைப்படத்தில் கமல் திரைக்கதை எழுதி, இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.   சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில்   கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் அட்டகாசமாக உருவான படம் இது. இந்தப்படம்  2001  தீபாவளிக்கு   வெளியானது.  தயாரிப்பாளர் தாணு இந்த படம்  குறித்து “எழிலோடும் பொழிலோடும் ஆளவந்தான்.. விரைவில் வெள்ளித்திரையில்” என பதிவிட்டிருந்தார். அவர் பகிர்ந்திருந்த திரைப்படத்தின் போஸ்டரில், “எழிலோடும் பொழிலோடும் விரைவில்... உலகமெங்கும் 1000 திரையரங்குகளில்.. இன்று 22 ஆம் ஆண்டில்” குறிப்பிட்டிருந்தார்.  இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் முத்து திரைப்படமும் ஆளவந்தானுடன் ஒரே நாளில் ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான திரைப்படம் முத்து. இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். நடிகை மீனா, சரத்பாபு, செந்தில் போன்ற முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர். கவிதாலயா தயாரிப்பில்  1995 அக்டோபர் 23 ம் தேதி ரிலீஸ் ஆகி இருந்தது. மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் இது.  டிசம்பர் 8 ஆம் தேதி கமல்ஹாசனின் ஆளவந்தான் திரைப்படம் ரீரிலீஸ் ஆக இருப்பதால் முத்து திரைப்படமும் அந்த தேதியில் ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 கடந்த 10 ஆண்டுகளுக்கு பின் கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் திரைப்படமும் ரஜினியின் சந்திரமுகி திரைப்படமும் நேரடியாக மோதின. சந்திரமுகி திரைப்படமோ 800 நாட்கள் ஓடி திரையுலகில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.  இந்நிலையில் ஏறத்தாழ 18 ஆண்டுகளுக்குப் பின் நேரடியாக கமல் ரஜினி திரைப்படங்கள் மோத இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  இரு படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆனாலும் தனித்தனியாக ரிலீஸ் ஆனாலும் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.  

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!