கதறி துடித்த பரிதாபம்.. ஒட்டகத்தை மரத்தில் கட்டிவைத்து அடித்தே கொன்ற கிராம மக்கள் !!

 

ஒட்டகத்தை கிராமத்தினர் மரத்தில் கட்டி வைத்து அடித்தே கொன்ற அதிர்ச்சி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் பிகானர் மாவடத்தில் சேர்ந்த சோகன்ராம் நாயக் என்பவர் வீட்டில் ஒட்டகம் ஒன்று வளர்த்து வந்துள்ளார். இவர் தனது மகனுடன் தங்களது வளர்ப்பு ஒட்டகத்தை வயலுக்கு அழைத்து சென்றிருந்தார். அப்போது கயிற்றால் கட்டப்பட்டிருந்த ஒட்டகம் திடீரென அதனை அவிழ்த்து விட்டு பாய்ந்து ஓடியது. இதை பார்த்த சோகன்ராம் நாயக், ஒட்டகத்தை பிடிக்க முயற்சித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது கழுத்தை கயிறு இறுக்கியது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கட்டையால் ஒட்டகத்தை அடித்தனர். எனினும் விடாத ஒட்டக்கத்தின் இறுக்கமான பிடியால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சோகன்ராம் அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால் சோகன்ராம் நாயக் குடும்பத்தினர் பெரும் சோகமடைந்தனர். மேலும் இந்த ஒட்டகத்தின் செயலால் அச்சமடைந்த கிராமத்தினர் அதை பிடித்து மரத்தில் கட்டி வைத்து கட்டையால் தாக்கினர். அந்த ஒட்டகம் வலியால் துடித்தபோதும் இளைஞர்கள், முதியவர்கள் என பலரும் சேர்ந்து அந்த ஒட்டகத்தைத அடித்தே கொன்றுள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

கடந்த 20 நாள்களுக்கு முன்னர்தான் சோகன்ராம் அந்த ஒட்டகத்தை வாங்கிய நிலையில், இயல்பிலேயே அது வன்முறையை வெளிப்படுத்தும் விதமாக நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதறிகிடையே ஒட்டகம் கொலை செய்யப்பட்டது தொடர்பாக எந்த புகாரும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் யார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்படவில்லை என கூறப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்!