மகன் காதல் திருமணம் செய்ததால் பெற்றோர் விஷம் குடித்து தற்கொலை..  கதறித் துடித்த புதுமணத்தம்பதி !!

 

கிருஷ்ணகிரி மாவட்டம் பெருகோனப்பள்ளி கிராமத்தில் வசித்து வருபவர்  சரவணன். இவரது   மனைவி கீதா(45). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள். இதில்   மூத்த மகன் ரஞ்சித்குமார் வியாபாரி. இவர் அதே பகுதியில் வசித்து வரும்   பட்டதாரியான தீபிகாவை காதலித்தனர்.   தீபிகா ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.இருவரும் வெவ்வேறு சமூகத்தினர்  என்பதால் அவர்கள் காதலுக்கு இருதரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், அதனைப் பொருட்படுத்தாத காதலர்கள் தொடர்ந்து பழகி வந்தனர்.

இதனைத்தொடர்ந்து திருமணம் செய்ய முடிவு செய்த காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி அப்பகுதியில் உள்ள கோயிலில் திருமணம் செய்து கொண்டனர்.  இதனால்  ரஞ்சித்குமாரின் பெற்றோர் சரவணன், கீதா ஆகியோர் கடும் மனவேதனை அடைந்தனர். தங்களது பேச்சைக் கேட்காமல் மகன் காதல் திருமணம் செய்து கொண்டதை நினைத்து கடும் மன அழுத்தத்தில் இருந்து வந்தனர். இதனால் நேற்று காலை 10 மணிக்கு  வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தனர்.


அக்கம்பக்கத்தினர்  அதிர்ச்சி அடைந்து  கணவன், மனைவி இருவரையும் மீட்டு மத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர்களைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், இருவரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.  மகன் காதல் திருமணம் செய்து கொண்டதை ஏற்று கொள்ள முடியாமல் பெற்றோர்   விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!