undefined

 தொடர் விடுமுறை | நாளை முதல் தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் !

 
 

சனி, ஞாயிறு வார இறுதி விடுமுறை, மிலாது நபி என்று தமிழகத்தில் தொடர் விடுமுறை தினங்களை அடுத்து பொதுமக்களின் வசதிக்காக நாளை வெள்ளிக்கிழமை மாலை முதல் தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை செப்டம்பர் 13 மற்றும் 14ம் தேதிகளில் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 955 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. 

அதைப் போலவே நாளை செப்டம்பர் 13 மற்றும் 14ம் தேதிகளில் சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 190 பேருந்துகளும், மாதாவரம் பேருந்து நிலையத்தில் இருந்து  20 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.பெங்களூர், திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 350 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதே போன்று இந்த தொடர் விடுமுறை தினங்களில் சொந்த ஊர் செல்பவர்கள், மீண்டும் சென்னை திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க http://tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை