சூரசம்ஹார விழா... திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்!
திருச்செந்தூரில் நடைபெறவுள்ள சூரசம்ஹார விழாவை முன்னிட்டு பக்தர்களின் நெரிசலை சமாளிக்க தென் ரயில்வே சார்பில் முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த ரயில் சேவை மூலம் பக்தர்கள் எளிதில் திருச்செந்தூருக்கு வந்து செல்லும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, திருச்செந்தூரில் இரவு 9 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், இரவு 10.30 மணிக்கு நெல்லையை சென்றடையும். மறுமார்க்கமாக, நெல்லையில் இரவு 11 மணிக்கு புறப்படும் ரயில், இரவு 12.30 மணிக்கு திருச்செந்தூரை அடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு ரயில் ஆறுமுகநேரி, நாசரேத், ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர், பாளையங்கோட்டை உள்ளிட்ட நிலையங்களில் நிறுத்தம் பெறும். சூரசம்ஹார விழாவை முன்னிட்டு திருச்செந்தூருக்கு வரவிருக்கும் பக்தர்களுக்கு இந்த ரயில் சேவை பெரும் வசதியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!