மா.சுப்பிரமணியன் மருத்துவமனையில் அனுமதி!! தொண்டர்கள் அதிர்ச்சி!!

 

 மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் உடல் நலக்குறைவுக் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  மா. சுப்பிரமணியன் வழக்கம் போல் இன்று காலை நடைபயிற்சி முடித்துவிட்டு தனது வீட்டில் பார்வையாளர்களை சந்தித்துக் கொண்டிருந்தார்.

அப்போது  அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு லேசான மயக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், உடனடியாக கிண்டியில் உள்ள கருணாநிதி உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு சர்க்கரையின் அளவு குறைந்து இருப்பதால் இந்த மயக்கம் ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்தனர். அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடல் நிலையை மருத்துவர்கள் தொடர்ந்துக் கண்காணித்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் செய்தி வெளியிட்டுள்ளது. இத்தகவலால் தொண்டர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை