முன்னாள் சுகாதாரத் துறை செயலாளர் பீலா வெங்கடேசன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி!
தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலா் பீலா வெங்கடேசன் உடல் நலக் குறைபாடு காரணமாக நேற்று காலமானார்.அவருக்கு வயது 56. இவரது உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று செப்டம்பர் 25ம் தேதி வியாழக்கிழமை காலை நேரில் அஞ்சலி செலுத்தினார்.
சென்னை கொட்டிவாக்கத்தில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பீலா வெங்கடேசனின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் கே.என். நேரு, மா. சுப்பிரமணியன் நேரில் அஞ்சலி செலுத்தினார். இவர்களுடன் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன், தமிழக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளான அமுதா, ராதாகிருஷ்ணன், ககன்தீப் சிங் பேடி ஆகியோரும் பீலாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
1997-ஆம் ஆண்டு பீகாா் மாநிலப் பிரிவில் இருந்து குடிமைப் பணிக்கு பீலா, தோ்ச்சி பெற்றாா். போஜ்பூா் மாவட்ட உதவி ஆட்சியராகப் பணியைத் தொடங்கினார். திருமணத்திற்கு பிறகு தமிழ்நாடு மாநிலப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாக மாறினாா்.இதன்பிறகு, செங்கல்பட்டு சாா் ஆட்சியராக தமிழ்நாட்டில் பணியைத் தொடங்கினாா். சுகாதாரம், வணிகவரி, கைத்தறி மற்றும் துணிநூல் துறைகளின் செயலராக பொறுப்பு வகித்தாா். கொரோனா காலத்தில் சுகாதாரத் துறைச் செயலராக பணியாற்றினாா்.தற்போது எரிசக்தித் துறை முதன்மைச் செயலராக பணிபுரிந்து வந்த நிலையில் திடீரென உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டாா். கடந்த சில மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!