நெகிழ்ச்சி... 25 வது திருமண நாளை மனைவியின் மெழுகுச்சிலையுடன் கொண்டாடிய கணவர்... !!

 

 கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் குந்தாபுரா தாலுகாவில் வசித்து வருபவர்  சந்திரசேகர். இவரது மனைவி சுமா. இவர்களுக்கு 2 மகள்கள் . இவர்களுக்கு  திருமணமாகி 25 ஆண்டுகள் ஆகிறது.  கடந்த மாதம் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு சுமா இறந்து விட்டார். இந்நிலையில் சந்திரசேகர் தனது மனைவி போன்று மெழுகு சிலையை தயாரித்து அந்த சிலையுடன் 25ம் ஆண்டு திருமண விழாவை சிறப்பாக கொண்டாட முடிவு செய்தார்.  

அதன்படி அவரது மனைவி சுமாவின் மெழுகு சிலையை தயாரித்து  உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா தாலுகா   ஆடிட்டோரியத்தில் வெள்ளி விழா திருமண ஆண்டை கொண்டாடினர்.   இதற்காக உறவினர்களை அழைத்திருந்தார். விழாவில் உயிரிழந்த  மனைவி சுமாவின் மெழுகு சிலையை வைத்திருந்தார். மிகவும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட  சுமாவின் சிலையை பார்த்து விழாவுக்கு வந்தவர்களுக்கு ஆச்சரியம் ஏற்பட்டது. உயிரிழந்த   சுமாவே நேரில் வந்து விட்டதாக உறவினர்கள் ஆச்சரியப்பட்டனர்.

பிறகு தான் அது   மெழுகு சிலை என உணர்ந்தனர்.  இதையடுத்து உறவினர்கள் ஆனந்த கண்ணீர் விட்டனர்.   சந்திரசேகர் தனது மனைவியின் மெழுகு சிலை அருகே நின்று புகைப்படங்கள் வீடியோக்களை எடுத்துக் கொண்டார். அவர்களுடன் அவரின்  2 மகள்களும் நின்று போட்டோ எடுத்துக்கொண்டனர். இறந்த மனைவியின் மெழுகு சிலையுடன் 25ம் ஆண்டு திருமண விழாவை  கொண்டாடிய சம்பவம் உறவினர்களிடையே  பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!