சொல் பேச்சு கேட்காத மகன்.. ஆத்திரத்தில் சங்கிலியால் கட்டி வீட்டில் அடைத்த பெற்றோர்கள்!

 

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் சக்லேஸ்புராவை சேர்ந்தவர்கள் அமீர் உசேன் மற்றும் ஹசீனா பானு தம்பதி. இருவரும் காபி தோட்டத்தில் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு ஏழு குழந்தைகள். இவர்களது ஆறாவது மகன் உபைதுல்லா (11). அவர் மிகவும் குறும்புக்காரர் மற்றும் மிகவும் கோபக்காரராக இருந்து வந்துள்ளார். இதனால் அவரை கட்டுப்படுத்துவது கடினமான ஒன்றாக பெற்றோர்கள் கருதினர்.

இதனால், அவரது இடுப்பில் இரும்புச் சங்கிலியை கட்டி காலில் கட்டி வீட்டுக்குள் அடைத்து வைத்தனர். இந்நிலையில், காலையில் வேலைக்குச் செல்லும் பெற்றோர், மதியம் வீட்டுக்கு வந்து, மகனுக்கு உணவு ஊட்டிய பின், வேலைக்குச் செல்கின்றனர். இந்த நிலையில் எப்படியோ தப்பிய சிறுவன், சாலையோரம் அமர்ந்திருக்கிறான். இதை பார்த்த அப்பகுதி மக்கள் சிலர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுவனை மீட்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து சிறுவனின் பெற்றோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!