போலீஸ் இன்ஸ்பெக்டரை அரைகுறை ஆடையில் கட்டி வைத்து தர்ம அடி..!! பகீர் வீடியோ!!
சமீபகாலமாக இளம்பெண்கள் , பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பெருகி வருகின்றன. பள்ளி செல்லும் சிறுமி முதல் மூதாட்டி வரை எந்நேரமும் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவை அடுத்துள்ள பர்ஹான் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சந்தீப் குமார் மதுபோதையில் திஹேயா கிராமத்தில் வசிக்கும் ஒருவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அந்த வீட்டில் இருந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்தார். இதற்காக அந்த சிறுமியின் ஆடைகளைக் கிழித்தெறிந்தார். கூச்சலிட்ட சிறுமியை தாக்கினார்.
இச்சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை அதிகாரிகளுக்கு இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு வந்த உயர் அதிகாரிகள், கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இன்ஸ்பெக்டரை மீட்டனர். குற்றம் சாட்டப்பட்ட இன்ஸ்பெக்டர் சந்தீப் குமாரை, உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அத்துடன் அவர் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்ஸ்பெக்டர் ஒருவர் போதையில் சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...