undefined

வைரலாகும் வீடியோ... ராணுவ உடையில் கடற்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி!

 

செம கெத்து, மிடுக்காக இந்திய கடற்படையினரின் உடை அணிந்து, பிரதமர் நரேந்திர மோடி நேற்று தீபாவளி பண்டிகையை இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பலுக்கு சென்று கடற்படை வீரர்களுடன் இணைந்து கொண்டாடினார். பின்னர் கடற்படை வீரர்களுக்கு இனிப்புகளை வழங்கி வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி அவர்களிடையே உரையாற்றுகையில், “இந்திய பாதுகாப்புப்படை வீரர்கள் காட்டும் தைரியம் மற்றும் அர்ப்பணிப்பு கடந்த சில ஆண்டுகளில் நாட்டை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளது. குறிப்பாக மாவோயிஸ்ட் மற்றும் நக்சல்தீவிரவாதத்தை கட்டுப்படுத்தியுள்ள சாதனை வரலாற்றுச் சிறப்புடையது.

இன்றைக்கு 100க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் மாவோயிஸ்ட் அச்சுறுத்தலிலிருந்து முழுமையாக விடுபட்டு, பல ஆண்டுகளுக்கு பிறகு அமைதி மற்றும் மகிழ்ச்சியுடன் தீபாவளியை கொண்டாடுகின்றன. நாட்டின் ஒவ்வொரு மூலையும் பாதுகாப்பு, அமைதி, வளர்ச்சியுடன் நிலை நிற்கும் வரை நமது போராட்டம் தொடரும்” என்றார்.

கடற்படை வீரர்களுடன் இணைந்து தீபாவளியை கொண்டாடிய இந்த நிகழ்வு, தேச பாதுகாப்பில் வீரர்களின் பங்கை பிரதமர் பாராட்டிய நிகழ்வாக அமைந்தது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?