சரிகிறதா திமுக பலம்... பல தொகுதிகளில் பொதுமக்கள் எதிர்ப்பு!
தமிழகத்தில் தேர்தல் களம் களைக்கட்டியிருக்கும் நிலையில், கோடை துவங்குவதற்கு முன்பாகவே தலைவர்களின் பிரச்சாரத்தில் அனல் பறக்கிறது. இந்நிலையில், பல தொகுதிகளில் ஆளுங்கட்சியினர் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவது அதிர்ச்சியடைய செய்துள்ளது.
பல தொகுதிகளில் வெற்றி பெற்ற எம்.பி., மீண்டும் அதே இடத்தில் தேர்தலில் நிற்பதால், தங்கள் பகுதிகளில் சுகாதார பிரச்சனைகள், அடிப்படை வசதிகள் கோரி மனு கொடுத்து மாதக்கணக்கில் காத்திருந்த பொதுமக்கள், வேட்பாளர்கள் ஓட்டு கேட்டு வரும் போது, பொதுஇடத்தில் தங்கள் அதிருப்தியையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்துகிறார்கள். தென்சென்னையில் தமிழச்சி தங்கப்பாண்டியன், மத்திய சென்னையில் தயாநிதி மாறன் என பொதுமக்கள் பிரச்சாரத்தின் போது தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!