மார்க் ஆண்டனி படபிடிப்பின் போது விபத்து! நடிகர் விஷால் படுகாயம்

 
விஷால்

வீரமே வாகை சூடும் படத்தினை தொடர்ந்து விஷால் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லத்தி'. த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தை அறிமுக இயக்குநர் வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தில் முருகானந்தம் என்ற கதாபாத்திரத்தில் காவலராக நடித்துள்ளார். வழக்கமாக கதாநாயகர்கள் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கும் போது இன்ஸ்பெக்டர், கமிஷனர், டிஜிபி போன்ற அதிகாரிகளாக தான் நடிப்பார்கள். ஆனால் விஷால் போலீஸ் கான்ஸ்டபிளாக இந்த படத்தில் நடித்து வருகிறார். 

விஷால்

ராணா புராடக்‌ஷன்ஸ் சார்பில் நடிகர்கள் ரமணா - நந்தா இணைந்து தயாரித்துள்ளனர். படத்திற்கான இசையை யுவன்ஷங்கர் ராஜா அமைத்துள்ளார். ஒளிப்பதிவு பணியை பாலசுப்ரமணியம் மற்றும் பாலகிருஷ்ணா தோட்டா ஆகியோர் கவனித்துள்ளனர்.

இந்த படத்திற்கு பின் விஷாலின் 33வது படமாக உருவாகும் புதிய படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். மார்க் ஆண்டனி என்ற தலைப்பில் உருவாகும் இந்த படத்தை ‘எனிமி’ படத்தைத் தயாரித்த மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கவுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக இப்படம் உருவாக உள்ளது.

விஷால்

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. பீட்டர் ஹெயின் ஸ்டண்ட் இயக்கத்தில் லத்தி திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பாக கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு வரும் நிலையில், சண்டைக் காட்சியில் நடித்து வந்த விஷால் காயமடைந்தார். முன்னதாக சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற லத்தி படத்தின் சண்டைக் காட்சிகளின் படப்பிடிப்பின் போதும் விஷால் காயமடைந்த நிலையில், அவர் மீண்டும் காயமடைந்தார். 

இந்நிலையில், இன்று காலை நடைபெற்ற படப்பிடிப்பின் போது நடிகர் விஷாலுக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது மார்க் ஆண்டனி படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

From around the web