`அண்ணாத்த’ படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம்!

 
`அண்ணாத்த’ படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம்!

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் நடிகர் ரஜினிகாந்த் இவர் தற்போது அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தீபாவளிக்கு திரையரங்குகளில் திரையிட படக்குழுவினர் தயாராகி வருகிறார்கள்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்த நிலையில் மேலும் சில காட்சிகளுக்காக வட மாநிலங்களில் படப்பிடிப்பு நடத்த உள்ளனர். படப்பிடிப்பில் பங்கேற்க பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி படிப்பிடிப்பில் கலந்து கொள்ளும் படப்பிடிப்பு குழுவினர் திரை நட்சத்திரங்கள் உட்பட அனைவரும் நிச்சயம் 2 டோஸ் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் எனவும், தடுப்பூசி போடாதவர்கள் படப்பிடிப்பில் பங்கேற்க முடியாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

`அண்ணாத்த’ படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம்!

அண்ணாத்த படத்தை பொறுத்தவரை நடிகை குஷ்பு தேர்தல் பணிகளில் ஈடுபட்டு இருந்ததால் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் பாக்கி உள்ளது. அவரும் படப்பிடிப்பில் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. ரஜினியின் காட்சிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு விட்டன. ரஜினிகாந்த் ஐதராபாத்தில் நடந்த அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்று தான் நடிக்க வேண்டிய காட்சிகள் அனைத்தையும் முடித்து கொடுத்தார்.

நயன்தாரா காட்சிகளும் முடிக்கப்பட்டு விட்டன. மற்ற நடிகர், நடிகைகள் சம்பந்தமான காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், சூரி, மீனா, கீர்த்தி சுரேஷ் உட்பட பல முண்ணனி திரை நட்சத்திரங்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது.

From around the web