ஜனநாயக கடமையாற்றிய நடிகை குஷ்பு!

 
ஜனநாயக கடமையாற்றிய நடிகை குஷ்பு!



தமிழகம் முழுவதும் சட்டப்பேரவை தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில் பாதுகாப்பிற்காக துணை ராணுவப் படையினர் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழக தேர்தல் களத்தில் மொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கை3,998பேர். கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் 12 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

ஜனநாயக கடமையாற்றிய நடிகை குஷ்பு!


தமிழகத்தில் இன்று காலை முதலே வாக்குபதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திரையுலகினர், அரசியல் கட்சியின் தலைவர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் நின்று ஆர்வத்துடன் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் நடிகை குஷ்பு ஆயிரம்விளக்கு தொகுதியில் தனது வாக்கை பதிவு செய்துள்ளார். முகக்கவசம் அணிந்து, சமூக விலகலை கடைப்பிடித்து கையில் கையுறை அணிந்து குஷ்பு தமது வாக்கினை செலுத்தியுள்ளார்.

dinamaalai.com

From around the web