நடிகை அனன்யா பாண்டே வீட்டிலும் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை

 
நடிகை அனன்யா பாண்டே வீட்டிலும் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை

பாலிவுட்டின் கதாநாயகர்கள் ஷாரூக்கானின் மகன் ஆர்யன் கான் சமீபத்தில் கார்டிலியா நிறுவனத்தின் சொகுசுக் கப்பலில் பயணம் செய்தார். இந்த கப்பலில் போதை விருந்தில் கலந்து கொண்ட 17 பேரை போதைப்பொருள் கடத்தல் பிரிவு அதிரடியாக கைது செய்தது.

நடிகை அனன்யா பாண்டே வீட்டிலும் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை

இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி ஆர்யன் கான் உள்ளிட்டோர் இரண்டாவது முறையாக மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் ஆர்யன்கான், அர்பாஸ் மெர்சண்ட் மற்றும் முன்முன் தமேச்சா ஆகியோருக்கு ஜாமீன் வழங்க மறுத்ததுடன் அவர்களின் மனுவை தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில் மும்பை மன்னாட்டில் உள்ள நடிகர் ஷாருக்கான் வீட்டில் போதைபொருள் தடுப்புப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

இன்று முன்னதாக, ஷாருக்கான் மகன் ஆர்யனை ஆர்தர் சாலை சிறையில் சந்தித்தார்.

மும்பை உயர்நீதிமன்றம் ஆர்யன் கானின் ஜாமீன் மனுவை அக்டோபர் 26 ஆம் தேதி விசாரிக்கிறது.

மேலும் இந்தி நடிகை அனன்யா பாண்டே வீட்டிலும் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

From around the web