ரூ.500, ரூ.1,000 நோட்டு குறித்து வங்கிகளுக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!

 
ரூ.500, ரூ.1,000 நோட்டு குறித்து  வங்கிகளுக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!

மோடி ஆட்சியின் மிகப் பெரிய சறுக்கலாக இன்று வரையில் எதிர்கட்சிகள் விமர்சித்து வருவது பழைய ரூபாய் நோட்டுக்களை மதிப்பிழப்பு செய்தது தான். கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என ஒரே நாளில் மத்திய அரசு அறிவித்தது.

மாற்றாக புதிய 500, 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டன. பண மதிப்பிழப்பின் போது பழைய நோட்டுகளை கொடுக்கவும், புது நோட்டுகளை வாங்கவும் மக்கள் வங்கிகளில் காத்துக் கிடந்தனர்.

ரூ.500, ரூ.1,000 நோட்டு குறித்து  வங்கிகளுக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!

இந்நிலையில் பணமதிப்பழிப்பு அறிவிப்பு வெளியான பின்னர் நிறையப்பேர் முறைகேடாக ரூ.500, ரூ.1000 நோட்டுகளை அதிகளவில் வங்கிகளில் டெபாசிட் செய்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அவை கருப்புப் பணமாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கிறது.

ரூ.500, ரூ.1,000 நோட்டு குறித்து  வங்கிகளுக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!

அப்போது யாரெல்லாம் வங்கிக் கிளைகளுக்கு வந்து பணத்தை டெபாசிட் செய்தார்கள் என்ற விவரங்களைத் தெரிந்துக் கொள்ள அன்றைய நாளில் எடுக்கப்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளைப் பத்திரமாக வைக்கும்படி வங்கிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2016 நவம்பர் 8 முதல் 2016 டிசம்பர் 30 வரையிலான சிசிடிவி கேமரா பதிவுகளை அழிக்காமல் பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என்று மத்திய அறிவுறுத்தியுள்ளது.

From around the web