உஷார்! அதிகரிக்கும் டெங்கு ! நிரம்பி வழியும் வார்டுகள்!
Oct 21, 2021, 18:09 IST
இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா கட்டுப்படுத்தப் பட்டுள்ளது. ஆனால் பல மாநிலங்களில் டெங்கு பரவி வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.
இதனையடுத்து சுகாதார பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதனை மேலும் தீவிரப்படுத்த அரசு நிர்வாகம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் நோயாளிகள் அதிகரிப்பால் வார்டுகள் நிரம்பி வழிகின்றன.
பல நோயாளிகள், தரையில் இருந்தபடியும் மற்றும் வாசல் பகுதியில் இருந்தபடியும், சிகிச்சை பெறும் சூழல் உருவாகியுள்ளது . இதனால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
From around the
web