சினிமா ஆசைகாட்டி விபச்சாரம்! அதிர வைத்த பட தயாரிப்பாளர்! சுற்றி வளைத்த போலீசார்!

 
சினிமா ஆசைகாட்டி விபச்சாரம்! அதிர வைத்த பட தயாரிப்பாளர்! சுற்றி வளைத்த போலீசார்!

குறுகிய காலத்தில் பணம், புகழ் என ஆசைப்படும் பெண்கள் வாழ்வில் தடம் மாறி விடுகிறார்கள். பொள்ளாச்சி சம்பவத்தில் நாடே அதிர்ந்த நிலையில், இன்னும் அங்கங்கே பல இடங்களில் அப்பாவி இளம்பெண்கள் புகழ் போதையிலும், பண ஆசையிலும் ஆசை வார்த்தைகள் பேசுபவர்களிடம் ஏமாந்து போகிறார்கள்.

சினிமா ஆசைகாட்டி விபச்சாரம்! அதிர வைத்த பட தயாரிப்பாளர்! சுற்றி வளைத்த போலீசார்!

திரைப்படங்களிலும், விளம்பர படங்களிலும் நடிக்க வைப்பதாகவும், லட்ச லட்சமாக சம்பாதிக்க வாய்ப்புகள் வரும் என்றும் ஆசை வார்த்தை கூறி, இளம் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி கல்லா கட்டியிருக்கிறார் பட தயாரிப்பாளர்.

மும்பையில் சாந்தி நகர் பகுதியில் இப்படி விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உஷாரான போலீசார், அந்த இளம் பெண்களையும் மீட்க திட்டம் வகுத்தனர். போலியாக வாடிக்கையாளர் ஒருவரை அந்த பகுதிக்கு அனுப்பி விசாரித்தனர். போலீசார் வைத்த பொறியில் திரைப்பட தயாரிப்பாளர் கன்யாலால் பால்சந்தானி சிக்கினார். கன்யாலால் மற்றும் அவருடைய உதவியாளர் வனிதா, பிங்கி ஆகிய 3 பேர் சேர்ந்து, சினிமா ஆசைக்காட்டி இளம்பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது தெரிய வந்தது.

சினிமா ஆசைகாட்டி விபச்சாரம்! அதிர வைத்த பட தயாரிப்பாளர்! சுற்றி வளைத்த போலீசார்!

இதனையடுத்து, போலீசார் அங்கு அதிரடியாக சோதனை நடத்தி, 3 பேரையும் கைது செய்தனர். அவர்கள் விபச்சாரத்தில் ஈடுபடுத்திய இளம் பெண்களையும் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமீப காலங்களாக இப்படி சினிமா ஆசையில் அப்பாவி பெண்கள் தவறானவர்களிடம் சிக்கி விபச்சாரத்தில் வீழ்வது அதிகரித்து வருகிறது.

From around the web