நாளை தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம்! களத்தில் இறங்கிய சிஎஸ்கே வீரர்கள்!

 
நாளை தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம்! களத்தில் இறங்கிய சிஎஸ்கே வீரர்கள்!

தமிழகம் முழுவதும் நாளை தடுப்பூசி முகாம் நடைப்பெற உள்ளது.

இந்நிலையில், நாளை நடைபெறவுள்ள சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் துபாயில் இருந்த படியே வீடியோ வெளியிட்டுள்ளனர். சிஎஸ்கேவின் பந்துவீச்சு பயிற்சியாளர் பாலாஜி வீரர்கள் ஜெகதீசன், சாய் கிஷோர் மற்றும் ஹரி நிஷாந்த் ஆகியோர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

நாளை தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம்! களத்தில் இறங்கிய சிஎஸ்கே வீரர்கள்!

நாளை தமிழ்நாடு முழுவதும் 10,000 முகாம்கள் நடத்தி கொரோனா தடுப்பூசி போட தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்கள், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், இரண்டாம் டோஸ் செலுத்தக்கூடியவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் நாளை தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த முகாம் பெரியளவில் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. சென்னையில் மட்டுமே 1,600 முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

From around the web