2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை !

 
2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை !

சென்னையை அடுத்த ஆவடியில் திருநின்றவூர் நடுகுத்தகையில் வசித்து வருபவர் ரமேஷ். இவருடைய மனைவி கௌரி. இவருக்கு வயது 24. இவர்களுக்கு தீக்ஷிதா என்ற 3 வயது மகளும், அஸ்வின் என்ற 1½ வயது மகனும் இருந்தனர்.

இவருடைய கணவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் இவர் சரிவர வேலைக்கு செல்லவில்லை. அடிக்கடி குடித்துவிட்டு வீட்டில் மனைவியுடன் தகராறு செய்து வந்தார்.
அதேபோல் குடிக்க வழக்கம்போல் மனைவியிடம் பணம் கேட்டு தகராறு செய்தார். அடித்து பணத்தை வாங்கி குடிப்பதற்காக வெளியே சென்றுவிட்டார்.

இதனால் விரக்தி அடைந்த கௌரி, குழந்தைகளை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டின் கதவை பூட்டி உள்தாழ்ப்பாள் போட்டார். வீட்டுக் கூரையில் இரும்பு குழாயில் தனது மகள் மற்றும் மகன் இருவரையும் தனித்தனியாக புடவையால் தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்தார். பின்னர் மற்றொரு புடவையால் அவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பக்கத்து வீட்டு பெண்ணொருத்தி கூழ் ஊற்றுவதற்காக கௌரியை அழைக்க வந்தார். வெகுநேரம் தட்டியும் கதவை திறக்காததால் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தார். வீட்டுக்குள் கௌரி 2 குழந்தைகளுடன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தாய் மற்றும் குழந்தைகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் இதுகுறித்து ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தாயும் குழந்தைகளும் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

From around the web