பரிதாபம்! மோட்டார் சைக்கிளில் லாரி மோதி இளைஞர் பலி!

 
பரிதாபம்! மோட்டார் சைக்கிளில் லாரி மோதி இளைஞர் பலி!

நாகர்கோவில் மாவட்டம் கீழையூர் ஒன்றியத்தில் அமைந்திருக்கும் காரைநகர் பெரியாச்சி கோவில் தெரு பகுதியில் வசித்து வருபவர் பக்கிரிசாமி. இவருடைய மகன் காமராஜ் கூலித்தொழிலாளி. இவருக்கு வயது30. இவர் தனது உறவினர் குணசேகரனுடன் மோட்டார் சைக்கிளில் நாகர்கோவிலில் இருந்து காரை நகரை நோக்கி வந்து கொண்டிருந்த போது வேளாங்கண்ணி ஆர்ச் அருகே அருந்தவம்புலத்தில் இருந்து நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் தூக்கி எறியப்பட்டனர்.

இந்த விபத்தில் விபத்தில் குணசேகரன், காமராஜ் ஆகியோர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் நாகை அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர்.

மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காமராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த குணசேகரன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web