கரூரில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை!

 
கரூரில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை!


தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டதால் அனைவரும் வீடுகளிலேயே எப்போதும் கைகளில் மொபைலுடனேயே பொழுதை கழித்து வருகின்றனர். அந்த வகையில் கரூர் தாந்தோணிமலை முத்தலாடம்பட்டி காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரகாந்தன். இவருடைய மகன் ஆஷிக்.இவருக்கு வயது 19.

கரூரில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை!

இவர் தாந்தோணிமலையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.தற்போது கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமே வகுப்புக்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் வீட்டில் இருந்த ஆஷிக் செல்போனில் அதிக நேரம் கேம் விளையாடியதால் ஆஷிக்கை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர்.


இதனால் மனமுடைந்த ஆஷிக் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தாந்தோணிமலை காவல்துறை ஆஷிக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த தற்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

From around the web