அதிரடி தீர்ப்பு! சிறுமியை பலாத்காரம் செய்த பூசாரிக்கு சாகும் வரை சிறை தண்டனை !

 
அதிரடி தீர்ப்பு! சிறுமியை பலாத்காரம் செய்த பூசாரிக்கு சாகும் வரை சிறை தண்டனை !

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள முக்காணி பகுதியில் வசித்து வருபவர் மாசாணமுத்து.இவருக்கு வயது 54. அப்பகுதியில் மக்கள் வழிபட்டு வரும் சுடலைமாடன் கோயில் பூசாரியாக உள்ளார். இதனால் அப்பகுதி மக்கள் இவரிடம் சென்று சாமிக்கு பூஜை செய்து வருவது வழக்கம். அந்த வகையில் அதே பகுதியை சேர்ந்த 35 வயது பெண் குடும்ப கஷ்டம், உடல்நிலை பாதிப்பு நீங்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

அதிரடி தீர்ப்பு! சிறுமியை பலாத்காரம் செய்த பூசாரிக்கு சாகும் வரை சிறை தண்டனை !


உடனே தானே பரிகாரம் செய்வேன் என்றும் ராமேஸ்வரம் சென்று பரிகாரம் செய்தால் குடும்ப கஷ்டம் உள்ளிட்ட பிரச்னைகள் நீங்கும் எனத் தெரிவித்ததை அடுத்து அந்த பெண் தனது 15 வயது மகளை அழைத்துக் கொண்டு 2019ல் பூசாரியுடன் ராமேஸ்வரம் வந்தார். பரிகாரம் செய்வதற்காக விடுதியில் தங்கியிருந்தபோது பூசாரி மாசாணமுத்து, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.


இதனை அறிந்த சிறுமியின் தந்தை பெரும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் பூசாமியை தண்டிக்கவேண்டும் என நினைத்த சிறுமியின் தாய், இதுகுறித்து ராமேஸ்வரம் மகளிர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் போக்சோ சட்ட பிரிவின்கீழ் வழக்கு பதிந்து மாசாணமுத்துவை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் மகிளா நீதிமன்றத்தில் நடந்தது.

அதிரடி தீர்ப்பு! சிறுமியை பலாத்காரம் செய்த பூசாரிக்கு சாகும் வரை சிறை தண்டனை !


இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் நீதிபதி சுபத்ரா பூசாரி மாசாணமுத்து மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவரை சாகும் வரை சிறையில் அடைக்க வேண்டும் என பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web