மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது பாய்ந்தது குண்டாஸ் சட்டம்!!

 
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது பாய்ந்தது குண்டாஸ் சட்டம்!!


தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் ஒன்றரை ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளன.ஆன்லைன் மூலம் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் பிரபல பள்ளி ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதனை கட்டுப்படுத்தவும் உடனடியாக புகார்களை பெறவும் அரசு உடனடி நடவடிக்கை எடுத்தது.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது பாய்ந்தது குண்டாஸ் சட்டம்!!


அந்த பள்ளியை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள மேலும் பல பள்ளி மாணவிகளும் புகார் அளித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி வந்த அறிவியல் ஆசிரியர் ஹபீப் முகம்மது, மாணவிகளுக்கு செல்போனில் பேசி பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.


பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் ஹபீப் முகம்மதுவைபோலீஸார் கைது செய்தனர். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் ஹபீப் முகம்மது பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் மீது, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்தி, ஆட்சியர் சந்திராகலாவுக்கு பரிந்துரை செய்தார்.
எனவே மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, ஹபீப் முகம்மது மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

From around the web