சேலத்தில் வேலைவாய்ப்பு பதிவினை புதுப்பித்து கொள்ள மீண்டும் ஒரு அரிய வாய்ப்பு!

 
சேலத்தில் வேலைவாய்ப்பு பதிவினை புதுப்பித்து கொள்ள மீண்டும் ஒரு அரிய வாய்ப்பு!


தமிழகம்முழுவதும் ஜூன் 7 வரை தளர்வில்லாத ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலத்தில் பல்வேறு காரணங்களால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை புதுப்பிக்க தவறியவர்களுக்காக சேலம் மாவட்ட கலெக்டர் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் 2017, 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்கள் பணிவாய்ப்பை பெறும் வகையில் மீண்டும் ஒரு முறை புதுப்பித்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். இதற்கான சிறப்பு புதுப்பித்தல் சலுகை தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை மூலம் மே 28ல் வெளியிடப் பட்டுள்ளது.

சேலத்தில் வேலைவாய்ப்பு பதிவினை புதுப்பித்து கொள்ள மீண்டும் ஒரு அரிய வாய்ப்பு!


இந்த சலுகையை பெற விரும்புபவர்கள் 3 மாதங்களுக்குள், அதாவது 2021,ஆகஸ்டு 27க்குள் இணையதளம் மூலம் தங்கள் பதிவினை புதுப்பித்து கொள்ளலாம் என அறிவித்துள்ளார். இணையதளம் மூலம் புதிப்பிக்க இயலாதவர்கள் ஆகஸ்ட் 27க்குள் சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு பதிவஞ்சல் மூலம் கோரிக்கை விடுத்தும் புதுப்பித்துக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

From around the web