தென்காசி தொகுதியில் எஸ்.பழனி நாடார் வெற்றியை எதிர்த்து அதிமுகவின் செல்வமோகன்தாஸ் பாண்டியன் வழக்கு

 
தென்காசி தொகுதியில் எஸ்.பழனி நாடார் வெற்றியை எதிர்த்து அதிமுகவின் செல்வமோகன்தாஸ் பாண்டியன் வழக்கு

தென்காசி தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற எஸ்.பழனி நாடார் வெற்றியை எதிர்த்து, அதிமுக சார்பில் போட்டியிட்டு 370 வாக்குகளில் வெற்றி வாய்ப்பை இழந்த செல்வமோகன்தாஸ் பாண்டியன் சார்பில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில் “தேர்தல் நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை. பதிவான வாக்குகளுக்கும், அறிவிக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கைக்கும் இடையில் வித்தியாசம் உள்ளது.

குறிப்பாக, தபால் வாக்குகளையும் மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகளில் 28 முதல் 30வது சுற்று வரையிலான வாக்குகளையும் மறு எண்ணிக்கை நடத்த வேண்டும். எதிர்த் தரப்பினர் பெற்ற வெற்றி செல்லாது என அறிவித்து என்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web