திருவாரூர் : இன்று ஆழித்தேரோட்டம்... குவிந்த பக்தர்கள்... உள்ளூர் விடுமுறை அறிவித்து கலெக்டர் உத்தரவு!

 
உள்ளூர் விடுமுறை

இன்று திருவாரூர் தேரோட்டத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். உலகப் பிரசித்தி பெற்ற திருவாரூர் மாவட்டம் தியாகராஜ சுவாமி கோவில் தேரோட்டம் இன்று நடைபெறுகிறது. 30 அடி உயரம், 30 அடி அகலத்தில் 300 டன் எடையுடன் ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் ஆடி அசைந்து வருவதைக் காண கண்கொள்ளாக் காட்சி. இன்று பவனி வரும் ஆழித்தேரோட்டத்தில் உள்ளூர் மக்களும் கலந்து கொள்ள வசதியாக இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

விடுமுறை

ஆழித்தேரில் தியாகராஜசுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சி நேற்ரவு அஜபா நடனத்துடன் விட்டவாசல் வழியாக தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தேரில் இருந்தவாறே தியாகராஜருக்கு இரவு சிறப்பு பூஜை நடைபெற்றது. இன்று காலையும் சிறப்பு பூஜைகளைத் தொடர்ந்து காலை 8.50 மணிக்கு  ஆழித்தேர் வடம்பிடித்து இழுக்கப்படும்.  

ஆழித்தேருக்கு முன் விநாயகர், சுப்ரமணியர் தேர்கள் காலை 5 மணிக்கு தொடங்கியது. இதனைத் தொடர்ந்து ஆழித்தேர் இதற்கு பின் கமலாம்பாள், சண்டிகேஸ்வரர் தேர்களும் வடம்பிடித்து இழுக்கப்பட உள்ளன.

உத்தரபிரதேச போலீஸ்

இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் இணைந்து செய்துள்ளன. விழாவை முன்னிட்டு   திருவாரூரில் 2000  போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.  தேரோட்டத்தின்போது கூட்டத்தை கண்காணிக்க தெற்கு வீதி, வடக்கு வீதி, மேற்கு வீதி, கீழ வீதி ஆகிய இடங்களில் உயர் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web