கோர விபத்து... ஆட்டோ மீது லாரி மோதி 6 பேர் பலியான சோகம்!

 
ஆட்டோ விபத்து
உத்தரபிரதேசம் மாநிலத்தில், கார்வி பகுதியில் நேற்று 8 பயணிகளுடன் ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது ஆட்டோ மீது பயங்கர வேகத்தில் லாரி ஒன்று மோதியதில் கோர விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த 8 பயணிகளும் பலத்த காயமடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் பிரயாக் ராஜு என்பவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

ஆட்டோ விபத்து

 

மருத்துவமனையில் மீதி 7 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி மேலும் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சூரஜ் (20) மற்றும் சுமித் (14) ஆகிய இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குடிபோதையால் நிகழ்ந்த மரணம் !

 

விபத்தில் உயிரிழந்தர்கள் அனிருத் (30), அகிலேஷ் (22), அதர் சிங் (50), தர்மேந்திர சோனி (30), மற்றும் நிதி சோனி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆட்டோ மீது லாரி மோதி, 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web