நாய்க்குட்டிக்கு ரூ.5 லட்சம் செலவில் பர்த்டே கொண்டாடிய இளம்பெண்!

 
சப்னா, நாய் சப்னா, நாய்

நாய்க்குட்டிக்கு ரூ.5 லட்சம் செலவழித்து, தடபுடலாக விருந்து பரிமாறி பர்த்டே கொண்டாடிய இளம்பெண்ணை பர்த்டே கொண்டாடிய நாய்க்குட்டியை வாழ்த்த வந்திருந்தவர்கள் விருந்தையும் சாப்பிட்டு, விநோதமாக பார்த்தப்படியே சென்றனர்.

செல்லப்பிராணிகளை வீட்டில் ஒரு நபராக இன்றைய தலைமுறையினர் வளர்த்து வருகின்றனர். குறிப்பாக, நாய்கள் மற்றும் பூனைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பவர்கள் அவற்றை சிறப்புப் பெயர்களால் அழைக்கிறார்கள். அந்தப் பெயரைத் தவிர வேறு ஏதாவது பெயரால் அழைத்தால், அன்றைய சூழ்நிலை கலவரமாக மாறும். 

 

View this post on Instagram

A post shared by Neon Man (@neonmannews)

மனிதர்கள் செல்லப்பிராணிகள் மீது வைத்திருக்கும் அபரிமிதமான அன்புக்கு எல்லையே இல்லை என்பதை  நாளுக்கு நாள் பார்த்து வருகிறோம். இதை நிரூபிக்க, ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு அற்புதமான சம்பவம் நடந்துள்ளது.   சப்னா என்ற பெண் ஜார்கண்டின் ஜாம்ஷெட்பூரில் வசிக்கிறார். அவர் சமீபத்தில் தனது செல்ல நாயின் பிறந்தநாளைக் கொண்டாடினார். இதன் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பலரை ஈர்த்து வருகிறது.

சப்னா தனது செல்ல நாயின் பிறந்தநாளை ரூ. 5 லட்சம் செலவில் அற்புதமாக கொண்டாடினார். அதுமட்டுமின்றி, கேக்கின் விலை மட்டும் ரூ. 40,000... கூடுதலாக, 300 பேருக்கு ஆடம்பர விருந்து, நாய்க்கான பிரமிக்க வைக்கும் உடைகள் மற்றும் அலங்காரங்கள், பிறந்தநாள் அழைப்பிதழ்கள்,    fog  மற்றும் ஒரு டிஜே உட்பட எதற்கும் பஞ்சமில்லை. இது தொடர்பான ஒரு காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!