வாரணாசி தெருக்களில் பிச்சை எடுக்கும் பி.எஸ்சி பட்டதாரி பெண்..!

 
வாரணாசி தெருக்களில் பிச்சை எடுக்கும் பி.எஸ்சி பட்டதாரி பெண்..!

பிரபல யூ-ட்யூபர் ஒருவர் வாரணாசிக்கு சென்றிருந்த போது யாசகம் கேட்கும் பெண்ணுடன் அவர் ஆங்கிலத்தில் நடத்திய உரையாடல் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

இந்த வீடியோவில் பேசும் பெண் தென்னிந்தியாவைச் சேர்ந்த ஸ்வாதி என்று யூ-ட்யூபரிடம் கூறுகிறார். பிஎஸ்.சி கணினி அறிவியல் படித்திருப்பதாக ஆங்கிலத்தில் கூறுகிறார். தொடர்ந்து பேசும் அவர், திருமணம் முடிந்து வாழ்க்கை நன்றாக இருந்தது. ஆனால் குழந்தை பிறந்த உடலில் பக்கவாத பாதிப்பு ஏற்பட்டது. அதனால் எனது வலதுபக்கம் செயலிழந்துவிட்டது.

வாரணாசி தெருக்களில் பிச்சை எடுக்கும் பி.எஸ்சி பட்டதாரி பெண்..!

அதையடுத்து என் வாழ்க்கை தலைகீழாக மாறிவிட்டது. என்னுடைய குடும்பத்தினர் என்னை கட்டாயப்படுத்தி வீட்டை விட்டு வெளியேற்றினர். பல இடங்களுக்கு சென்றுவிட்டு, இப்போது 3 ஆண்டுகளாக வரணாசியில் பிச்சை எடுத்து வருகிறேன் என்று வீடியோவில் அந்த பெண் கூறியுள்ளார்.

அப்போது யூ-ட்யூபர் குறுக்கிட்டு வேலை கொடுத்தால் செய்வீர்களா என்று கேட்க, அதற்கு அவரும் சரி என்று பதிலளித்துள்ளார். ஸ்வாதிக்கு வேலை கொடுத்து உதவுங்கள் என்று யூ-ட்யூபர் கூறுவதுடன் வீடியோ நிறைவடைகிறது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

From around the web