ஐஏஎஸ் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை... உருக்கமான கடிதம் சிக்கியது!

 
ஜெகதீஷ்

ஐஏஎஸ்., ஐபிஎஸ்..உள்ளிட்ட சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர், தேர்வு நெருங்கும் சமயத்தில் பயத்தின் காரணமாக தற்கொலைச் செய்து கொள்வதாக உருக்கமாக கடிதம் எழுதி வைத்து தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் பெங்களூரு, தொட்டபல்லாபூர் தாலுகா நெல்லுக்குண்டே அருகே உள்ள மஜரஹோசஹள்ளியை சேர்ந்தவர் ஜெகதீஷ் (28). இவர் எம்.ஏ.எம்.எட் படித்து வந்தார். யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) நடத்தும் வருடாந்திர போட்டித் தேர்வுக்கும் அவர் தயாராகி வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஜெகதீஷ் வீட்டில் அனைவரும் ஊருக்கு சென்றுவிட்டனர். நேற்று முன்தினம் அவர்கள் வந்து பார்த்தபோது, ​​வீடு பூட்டியிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஜெகதீஷின் பெற்றோர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். ஜெகதீஷ் அறையில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். அதன்பின், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து ஜெகதீஷின் அறையை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் எழுதிய கடிதம் கிடைத்தது. இதில், தேர்வு பயத்தால் தான் தற்கொலை செய்து கொண்டதாக ஜெகதீஷ் எழுதியிருந்தார். அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.தேர்வு பயத்தில் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்டாரா என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web