கேரளாவில் மீண்டும் உயரும் கொரோனா.. 178 பேர் பலி!..
Sep 16, 2021, 21:35 IST
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,182 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 44,46,228 ஆக உயர்ந்துள்ளது.
தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 178 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனையில் இதுவரை 1,86,190 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலத்தில் தொற்று பாதிப்பு விகிதம் 18.25% உள்ளது.
இதனால், கேரளாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 42,36,309 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பைக் கண்டறிய இன்று 1,21,486 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. கேரளாவில் தொற்று பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 23,165 ஆக உயர்ந்துள்ளது.
From around the
web