குட் நியூஸ்!! வரும் திங்கள் முதல் இவற்றுக்கு முழு அனுமதி!! மத்திய அரசு அறிவிப்பு!
Oct 13, 2021, 05:46 IST
கடந்த ஒன்றரை வருடங்களாக உலகம் முழுவதும் கொரோனா பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் ஊரடங்கால் முடக்கப்பட்டன.
இந்தியாவிலும், 2020 மார்ச் 24ம் தேதி அமல்படுத்தப்பட்ட கொரோனா ஊரடங்கு தொடர்ந்து 21 நாட்கள் நீட்டிக்கப்பட்டது.
மே மாததத்தில் சிறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கட்டுப்பாடுகளுடன் உள்ளூர் விமான சேவை துவங்கப்பட்டது. ஜூலையில் சர்வதேச விமான சேவையும் தொடங்கப்பட்டது.தற்போது இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், உள்நாட்டு விமான போக்குவரத்துக்கான கட்டுப்பாடுகளை மத்திய அரசு முழுவதுமாக நீக்கியுள்ளது. அதன்படி அக்.18 முதல் 100% பயணிகளுடன் உள்நாட்டு விமானங்களை இயக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
From around the
web